குரு பெயர்ச்சியின் சிறப்பு !
உங்கள் வாழ்வு சிறக்க, தோஷங்கள் நீங்கி சந்தோஷம் மலர்ந்திட, எல்லா வளமும் பெற்றிட இந்த மகா யாகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக விளக்கம்
குரு பகவானை ஆராதித்து பரிபூரண அருளை பெறுங்கள்
நவகிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகமாக பார்க்க கூடியவர் குருபகவான். காரணம் குரு பெயர்ச்சியால் எத்தகைய தோஷம் இருந்தாலும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கும் குரு பகவான் இந்த முறை மிதுனம் ராசியிலிருந்து கடகத்துக்கு செல்கிறார். கடகம் குரு பகவானின் உச்ச வீடு. உச்ச வீட்டுக்கு செல்லும் குரு பகவான் தனது 5, 7, 9 ஆம் பார்வைகளாக விசேஷப் பார்வையாக விருச்சிகம்,மகரம், மீனம் ராசிகளை பார்க்கிறார்.
குரு பகவான் 12 வருடங்களுக்கு ஒரு முறையே தனது உச்ச வீடான கடகத்துக்கு வருவார். அந்த சமயத்தில் எல்லா ராசிக்காரர்களுமே குருபகவானை விசேஷமாக வழிபடுவது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அதிலும் விசேஷமாக குருபகவானுக்கு உகந்த வகையில் யாகங்கள் செய்து பிரீத்தி செய்து அவரைக் கும்பிடுவது குடும்பத்தில் எல்லா வளங்களையும் பெருகச் செய்யும் என்பது ஐதிகம்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருள் ஆசியுடன், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ அவர்களின் வாழ்த்துகளுடன், ஆன்மிகப் பிரபலங்களின் முன்னிலையில் நடைபெறும் இந்த மகாயாகம், குரு கடாட்சத்தை நோக்கி ஒரு முழுமையான ஆன்மிக அனுபவமாக அமையும்.
